‘Tamil Poems’ பகுப்புக்கான தொகுப்பு

புரட்சியாளர் ” சே குவேரா “

ஜூன் 13, 2008

கலைஞரின் 85-வது பிறந்த நாளில் அவருக்கு அர்பணிக்கும் கவிதை.

புரட்சியாளர் ” சே குவேரா “-வின் 80-வது பிறந்த நாள் (14-06-1928) நினைவுக் கவிதை

புரட்சியாளர் ” சே குவேரா “

சே குவேரா!
நீ வேறா? புரட்சி வேறா?
இல்லை
நீ புரட்சியின் வேரா?

” சே குவேரா “
உன் பெயர் உச்சரிக்கையில்
என் உச்சிமயிர் சிலிர்க்கிறதே!
உள்ளத்தில் தீ மூள்கிறதே!

ஏனோ சிலர் உனை
அலங்காரப் படம் ஆக்கிவிட்டனர்
ஆயத்த ஆடைகளில்
தெரிந்தோ? தெரியாமலோ?
ஏகாதிபத்தியத்தின் வியாபாரத் தந்திரமோ?
ஏகோபித்த வசீகரச் சின்னமோ? – நீ

” ரொசாரியோ “
நீ பிறந்த ஊராக இருக்கலாம்
இன்றும் நீ வாழும் ஊர்
புரட்சி விதைக்கப்பட்ட இளைஞர்களின் ” இதயூர் ” (இதய ஊர்)

தோட்டா உனை நோக்கிப் பாய்ந்தாலும்
காட்டாதே உன் முதுகு – புறமுதுகு!
சங்கத்தமிழ் பயின்றவனோ ?!
உன் தாய் தமிழச்சி மரபணு கொண்டவளோ ?!

நீ பிறந்த மாதம் ஜுன் (14-06-1928)
என் ஆசான் கலைஞர் பிறந்த மாதமும் ஜுன் (03-06-1923)
முத்தமிழ் அறிஞர் கலைஞரோ உனக்கு – அண்ணன்
நீயோ! அவர் இதயத்தில் என்றென்றும் – புரட்சி மன்னன்.

எண்பத்தைந்து அகவையிலும் எழுதுகிறார் ஏட்டில்
உன் எண்பதாவது அகவையாண்டில்
உனது கியூபப் புரட்சியை, பாடிஸ்டா வீழ்ச்சியை
யாருக்காக? இளைஞர்களே! நமக்காக.

நீ மருத்துவராய்
மோட்டார் சைக்களில் பயனித்து,
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும், கம்யூனிசத்தின் அவசியத்தையும்
கண்டுணர்கிறாய் புரட்சியாளனாகிறாய்!
மோட்டார் பயணம் புரட்சிப்பயணமாகிறது.

எல்லைகள் கடந்தாய், ” பிடல் காஸ்ட்ரோ ” நண்பரானார்
கியூபப் புரட்சி கண்டாய், பாடிஸ்டாவை வெண்றாய்!
காங்கோ சென்றாய், பொலிவியா சென்றாய்…
புரட்சியாளனின் பயணம் முடிவதில்லை
தொட்ர்வது, தொடர்ந்துகொண்டே இருப்பது.

இயேசுவைக் காட்டிக்கொடுக்க ” யூதாஸ் ” இருந்தான்
ஐந்து வெள்ளிக்காசை இலஞ்சமாகப்  பெற்றுக்கொண்டு
” சே குவேரா ” ஐக் காட்டிக்கொடுக்க ஒருவள் இருந்தாள்
ஐம்பது பெஸோக்களை  ” சே குவேரா ” விடம் பரிசாக வாங்கிக்கொண்டு.

அன்று அக்டோபர் – 9, மதியம் 1.10 மணி

” கோழையே! சுடு,
நீ சுடுவது ” சே “-வை அல்ல
ஒரு சாதாரண மனிதனை “.

தோட்டா ஒன்று ” சே “-யின் இதயத்தை துளைத்தது
கோடானகோடி இதயங்களில் விதைக்கப்பட்டது ” புரட்சி “!

புரட்சியாளன் என்றும் இறப்பதில்லை
விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்
களர் இதயங்களில் அல்ல
விளை இதயங்களில்.

ஒடுக்கப்பட்டவர்களின் பயணம் உலகமெலாம் தொடர்கிறது
அடக்குமுறைக்கு எதிராக,
மொழி, இனம் காத்திட
மறவன் சேனையாக, இளைஞர் பட்டாளமாக……

                                           – ஜோவியா 

 

Tamil Poem 11

மே 29, 2008

அமைதி

கவிஞர்களின் சங்கம நாள்
கவிதை எழுதச் சொன்னார்கள்
எனக்கு வந்த தலைப்பு “அமைதி”.
வெள்ளைத் தாளில் எழுத அமர்ந்தேன்
மற்ற கவிகள் அமைதியானார்கள்.

நான் (?)
அமைதியற்று, அமைதியற்று
மூலைகலங்கிற்று, கண்கள் சோர்ந்திற்று
இறுதியாக கவிதையை முடித்தேன்,
என் அழகிய பெயருடன்.

வெள்ளைத்தாளில் “அமைதி” தலைப்பாக
என் அழகிய பெயர் முடிவாக
இடைவெளி அமைதியாய் இருந்தது
ஒன்றும் எழுதப்படாமல்.

கவிஞர்களின் சங்கம நாளில்,
கவிஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
“என் கவிதையின் அமைதியை
யாரும் கெடுத்து விடாதீர்
இடையில் ஏதேனும் எழுதி”.

- ஜோவியா

Tamil Poem 10

மே 24, 2008

“இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல” என்ற வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பில் “முதிர்கன்னி” என்ற கவிதை எனக்குள் ஏற்படுத்திய உணர்வின் வெளிப்பாடே நான் எழுதும் இந்த “முதிர்கன்னி”

               முதிர்கன்னி

தாலாட்டி, சீராட்டி,
நல்லமுது, நிலாச்சோறூட்டி,
இரட்டைச் சடை, சிண்டு, ஒற்றைப்பூவென
அழகு பார்த்து வளர்த்த நல்பெற்றோரே!
வயசுக்கு வந்தவுடன்
உறவெல்லாம் சொல்லி விருந்து வெச்சீங்க
“இந்தப் பூ” விற்பனைக்கென சமிக்ஞை தந்தீங்க.

முதலில் நாட்கள் ஓடின
இப்ப வருடங்கள் ஓடுது
பெட்ரோலும் தீரப்போகுது
ஜனனப்பெட்ரோலும் தீரப்போகுது.

தத்துவம் பேசி, மத ஒழுங்கு கடைபிடிச்சு
சமுகக்கட்டுக்குள் சிறைபட்டிருக்கும் மக்களே!
நாங்கள் (முதிர்கன்னி) உட்பட
விடுதலையாக சுதந்திரக் காட்டில்
இயற்கையுடன் இயற்கையாக வாழ்ந்திருந்தால்
நான் இந்நேரம் பாட்டியாயிருப்பேன்.

நான் கன்னியாக இருந்தபோது கண்ணாடி பார்த்தால்
பருவப் பூரிப்புப் பரவசத்தில்,
“பருவக் காயிரண்டைக் கனியவைக்க யார் வருவா
பருவக் காளையது பருவத்தில் வருமா
கல் வைத்துக் கனியவைக்குமா
கண், கை வைத்து கனியவைக்குமா” என
மனக்கவிதை எழுதிய காலமும் போச்சே!

நான் இப்போதும் அதே கண்ணாடி பார்க்கிறேன்
என் நிர்வாண உடல் பார்க்கிறேன்
காரித் துப்புகிறேன்
முலையிரண்டும் ஊஞ்சலாகி விழுதாகிறது
சங்ககாலப்பெண் முறத்தால் புலியை விரட்டினாலாமே
என் முலையிரண்டையும் அறுத்தெறிகிறேன் காகத்திற்கு
நீண்ட நகங்களை வெட்டுவதில்லையா?

நீங்கள் விரதம் இருக்கிறீர்கள்
நானும் விரதம் இருக்கிறேன்
எனது விரதம் “விரகதாபம்”
எனது விரதத்திற்கு முடிவில்லை.

இரவு நேரத்தில்,
இரவு படர்ந்த தேசங்களிலிருந்து வரும்
புணர்ச்சிகளின் முணங்கல்களும், மூச்சின் உச்ச ஸ்தாதியும்
எங்களுக்கு மட்டும் கேட்கிறது
விழிகளில் இருந்து வழியும் கண்ணீர்
காதை அடைகிற நேரத்தில்
சூரியன் விழித்து விடுகிறான்.
எங்கள் விழிகள் தூங்குவதில்லை
“தூக்கமின்மை”
எங்களைப் பார்த்துச்சென்ற வரன்கள் தந்த
“வரனிதட்சனை”.

“தனி ஒருவனுக்கு உணவில்லை என்றால்
ஜகத்தினை அழி” என்றான் பாரதி.
என் பசி தீர்க்க யாரை அழைப்பது பாரதி
மன்னிக்கவும்
என் பசி தீர்க்க யாரை அழிப்பது பாரதி.

தலைவியின் சிறிதுகால தலைவர் பிரிவை
காமத்துப்பாலில் பத்துக் குறளில் தந்தார் வள்ளுவர்
எங்களுக்கு எந்தக் குறள் தந்தார்
உன் அனுமதியுடன்
1331-வது குறளை நானே எழுதுகிறேன்
“பூப்பெய்தி ஆண்டோடி விலக்கு மாய்ந்து
விரகதாபமுற்றி முதிர்கன்னியென்ற நடைபிணம்”.

                                                         – ஜோவியா

Tamil Poem 9

ஜனவரி 31, 2008

மீசையை பெண்ணாக பாவித்து எழுதப்பட்ட கவிதை.

மீசை

நான் அவன் காதலி,
பருவத்தில் பயிர் செய்ய வந்தவள்.
அவனில் ஹார்மோன் விளையாட்டு
விபரீதம் நான்.
அவனில் ஆண்மையின் வெளிச்சம் நான்.
அவன் விரும்பாவிட்டாலும்
அவனில் அரும்பிவிடுவேன்.
அரும்பின் குரும்புகள் உண்டு.
எரிச்சல் படாதே!
அவை எனது காதல் ஸ்பரிசம்.

எனது முத்தம் அவன் மேல் உதட்டோடு
கீழ் உதட்டோடு சேர்ந்து தர
ஆங்கிலப் படம் பார்த்ததில்லை.
முடி முளைத்த மச்சம் நான்,
தருவேன் ஆண்மை அதிர்ஸ்டம்.
நீ ஹிட்லர் (செக்ஸில்)
உனக்கு நானுமா ஹிட்லர்?
என்னை வளைப்பதால் என்ன பயன்?
வில்லை வளையுங்கள்,
சீதை கிடைப்பாள்.

என்கிட்ட ஏனிந்த முறைப்பும், முறுக்கலும்
மெல்லியாள் நான் வலியாளைத் தேடும்
காமத்தீயால் கருத்திருந்தேன்
ஓர் பாலுறவு நானறியேன்.
எனக்கு ஏன் கருத்தடை ஆப்ரேசன்.

கலைஞர் கண்ட உளியா நான்?
வைரமுத்துவின் குறுக்குச் சிறுத்தவள்.
கெடு நேரத்தில் ஏனிந்தத் தடவல்,
எனக்கு கூச்சமாயிருக்கு.

குருடர், செவிடர் பார்ப்பதில்லை!
நெட்டை, குட்டை பார்ப்பதில்லை!
நிறவெறி என்னில் இல்லை!
மதவெறியும் என்னில் இல்லை!

ஆடவரே,
சூதாட்டத்தில் வேண்டுமானால் பாஞ்சாலியை வையுங்கள்
என்னையும் வைப்பது முறையோ?
பாஞாலிக்கு துச்சாதனன் அவையில் கற்பு மிஞ்சியது.
உங்கள் அவையில் எங்ஙனம் நான் மிஞ்சுவது.

நான்,
ஐஸ்வர்யாவதும், டையானா ஹேடனாவதும்
உங்கள் கையில்
காயசண்டிகையாவதும், சூர்பணகையாவதும்
உங்கள் கையில்.
ஓர் வேண்டுகோள்:
என்னைப் பூலான்தேவியாக மாற்றிவிடாதீர்!
என் கையில் இருப்பது ஈட்டி தான்
பாவம் என் காதலர், குத்தப்போகிறது
காதல் கொடையாக கத்தரித்துவிடுங்கள்
என் கைகளைத்தான் சொல்கிறேன்.

நாட்டியம் நானறியேன்
காதல் சரசம் நான் புரிவேன்
“ஒருவனே” உன்னிடம் மட்டும் தான்.

ஆடவரே,
விரும்பியபடி தடவிக்கலாம்
மலை வாழைத்தொடையா எனது?
காலத்துக்கும் வெச்சுக்கலாம்
எனது அதிர்ஸ்டம் நினைவிருக்கா?
ரதிக்கு இச்சதி தெரியுமானால்
விதியென விட்டுவிடு,
என்னை ஒதுக்கிவிடு,
சொல்லிவிடு,
உன் கண்ணகி இருக்கும் வரை
நான் மாதவி தானே!

கண்ணகியே,
என்னால் உங்களில் இடைவெளியா?
உன் கோவலனிடம் கூறிவிடு
மாதவி நான் மாண்டுவிடுகிறேன்.

என்னவனே!
உன் கண்ணகி இறந்துவிட்டளா?
“மாதவி” என்னையும் ஒதுக்கிவிடுங்கள்
கண்ணகிக்கு எனது இதய அஞ்சலி.
பின்னாளில்,
கண்ணகி நினைவில்
“மாதவி” என்னை வைத்துக்கொள்ளுங்கள்.

வாழையடி வாழை நாங்கள்
எங்களில் மலடி யாருமிலர்
வெட்டினால் வளர்வோம்
அழித்தால் புதியதாய்ப் பிறப்போம்
இன்னும் வலுவோடு.
உங்கள் ஆண்மை உதிருமானால்
நாங்கள் பொறுப்பல்ல
மருத்தவரை நாடவும்.
நாங்கள் தருகிறோம்
வாழ்நாள் உத்திரவாதம்
எங்களால் வராது
உங்களுக்கு “எய்ட்ஸ்”
எங்களுக்கு சிசேரியன் நடந்தால்
காதலரே, டாக்டரிடம் கூறவும்
கத்தரியை ஸ்டேரலைஸ் (சுத்தம்) செய்ய
மறந்துவிடாதே இதற்கு முன்
கத்தரிக்கப்ப்ட்டவன் “எய்ட்ஸாலி”.
- ஜோவியா

Tamil Poem 8

அக்டோபர் 11, 2007

முத்தம்

முத்தம் என்பது தான் என்ன?
இரு இதழ்கள் இணைந்த பதிப்பா?
அல்லது
இரு இதழ்கள் திறந்த பிடிப்பா?
பதிப்போ! பிடிப்போ!
எதுவாயினும் இருக்கட்டும்.

முத்தம் ஓர் மொழி
முதல் மொழி,
முத்தான மொழி,
மனிதகுலத்தின் செம்மொழி
இல்லை
உயிரினத்தின் உச்சமொழி.
எச்ச மொழியென்று யாரும்
கொச்ச மொழி பேசாதீர்.

மொத்தத்தில் முத்தம்
பாச மொழி
காம மொழி என
விழி இரண்டாய்
இனம் இரண்டாய்
முத்த மொழி இரண்டு.

முத்தம்
இரு இதழ்கள் இணைந்த பதிப்பானால்
பாசமொழி, நேசமொழி, அன்புமொழி.
முத்தம்
இரு இதழ்கள் திறந்த பிடிப்பானால்
காம மொழி.

பாசமொழி
பால் பேதமற்ற மொழி,
அகவை அற்ற மொழி,
எல்லோரும் நவின்ற மொழி.
காம மொழி
வேற்று பால் உணரும் மொழி,
பருவத்தால் பயின்ற மொழி,
கலவி இன்பத்தின்
பிள்ளை மொழி,
பிள்ளையார் சுழி!

முத்தம் எதுகையும் மோனையும் அமைந்த
நல் கவிதை
இது ஓர் மரபுக்கவிதை.
கண்ணத்தில் முத்தமிட்டால்
இருவரி திருக்குறள்
இதழோடு இதழ் கவ்வி முத்தமிட்டால்
நால்வரி நாலடியார்.

முத்தம் இடுவீர்!
முத்த மொழி மொழிவீர்!
முத்தத்தால் யாரும் மடியார்
இக்கவிதை எழுதியதால்
என்னை யாரும் அடியார்.

  – ஜோவியா

Tamil Poem 7

அக்டோபர் 7, 2007

பால்

கடந்தகாலம்:

ஆடையற்று நின்றிருந்தேன்
நிர்வாணக் கோலம் பூண்டிருந்தேன்
எனை நோக்கும் விழிகள் இல்லை!
எனைத் தீண்டிடும் விரல்கள் இல்லை!
காமப்பால் பருகிட இதழ்களும் இல்லை!

நிகழ்காலம்:

ஆடைகட்டி நிற்கிறேன்,
பொங்கிப் பூரித்து நிற்கிறேன்,
எனை நோக்கும் விழிகள் எத்தனையோ!?
எனைத் தீண்டிடும் விரல்கள் எத்தனையோ!?
காமப்பால் பருகிடத் திறக்கும் இதழ்கள் எத்தனையோ!?

எதிர்காலம்:

என் ஆடை அவிழ்கப்படப் போகிறது,
பொங்கி நின்ற பூரிப்பு அழியப் போகிறது,
வெண்மேனி வீனாகப் போகிறது,
ஓரிருநாள் வாழ்நாள் முடியப் போகிறது.

சரி,
நான் ஆண் பாலா?
இல்லை
நான் பெண் பாலா?

இக்கவியின் பதில்:
ஆவின் பால்.

- ஜோவியா

Tamil Poem 6

செப்டம்பர் 6, 2007

மையெழுதி

“பேனா”
யார் என்னை அழைப்பது?
“பேனா” என்றழைத்து ஆங்கிலத்தைக் குதறாதீர்
“பெண்” என்றே அழைத்துக் கொள்ளுங்கள்.
ஏன்?
நானும் அந்த நாட்களில்
ஆடையை ஈரமாக்குவதால்.
தமிழில் நான் “எழுதுகோல்”
பழமைகள் வைத்த பழைய பெயர்
நாகரீக நங்கை நான்
புனைந்துகொள்கிறேன் புனைப்பெயர் “மையெழுதி”.

பெயரிலெ மையல் இருப்பதால்
விரும்பியபடி காதல் செய்வீர்
எனை வைத்து எப்படியென முனங்காதீர்.
வள்ளுவன் எனைக் காதல் செய்யலையோ!
காம்த்துப் பால் படைக்கலையோ!

கலைஞரின் விரல் இடுக்கு வெப்பம்
என்னை இளமையாய் வைத்திருக்கிறது
நானும் அவரை இளைஞராகவே வெச்சிருக்கிறேன்
அவர் துணைவியார் மன்னிக்கவும்

வைரமுத்துவின் வைர வரிகள்
யாரும் அப்படிச் சொல்லாதீர்
வெட்கமாக இருக்கிறது
என் இடுப்பு மடிப்புகள் தான் அவை.

பெண்களிடத்தில் சிக்கிக் கொண்டால்
வெச்சுக்கிறது அவர்கள் வழக்கமில்லாததால்
வைபதற்குப் பதில் சொருகிக்கொள்கிறார்கள்
இடுப்பு இடுக்குச் சேலைக்குள்
என் தலை மட்டும் தப்பியதால்
பம்பராட்ட மைதனம் பார்க்கிறேன்
ஓர் கோணத்தில்
முக்கோணம் தெரிகிறது
பிதாகரஸ் தேற்றம் படிக்கிறேன்.

எல்லோரும் என்னை வெச்சுக்கலாம்
பால் பேதம் பார்ப்பதில்லை
கவிஞர்களிடம் உறவாடுகையில்
முன்விளையாட்டு உரசல்கள் ஏராளம்
கதாசிரியர்களிடம் உறவாடுகையில்
பாகவதர் படம் பார்த்த அனுபவம்
சீர்திருத்தவாதிகளிடம் உறவாடுகையில்
சீரழிந்த நான் சீராகுகிரேன்
அறிஞர்களிடம் உறவாடுகையில்
எனக்கே மூலை முளைத்துவிடுகிறது.

நான் முற்றிலும் இல்லாமால்
போகும் காலமும் தொலைவில் இல்லை
கணினி கண்கலங்க வைக்கிறது
அச்சும் அச்சமூட்டுகிறது
தொலை நகலும் தொல்லை தருகிறது
செல்பேசியிலும் செல்லச்சு வரலாம்
நான் செல்லாக் காசாகலாம்
கையொப்பமிடவாவது ஒப்புக்கொள்ளுங்கள்.

மென்பொருள் நிபுணர்களே
மென்பொருள் எழுதுகிறோமென்று சொல்லாதீர்!
எங்களை முட்டாள் ஆக்காதீர்!
டைப் அடிக்கிறோம், பொத்தான் அழுத்துகிறோம்
என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
திருத்தப்பட்ட காலம் வரும்
“மையெழுதி” பிடிக்க கற்றும் தரும்.

ஆசிரியர்களை வெறுக்கிறேன்
விடைத்தாளில் இரத்தக் கீறல்கள் செய்வதால்
பொய் கையொப்பமிட்டவர்களே
தன் கையெழுத்தை தனதல்ல என்றவர்களே
பாரதி சொன்னது போல்
காரி உமிழ்கிறேன்.
மரண தண்டனை ரத்தாகும் வரை
கணம் நீதிபதிகளை புறக்கணிக்கிறேன்.
– ஜோவியா

Tamil Poem 5

செப்டம்பர் 1, 2007

கரு

என் நாடு ஆண் பால் நாடு
அந்நாடோ பெண்பால் நாடு
இங்கு,
வேற்றுமைகள் பல உண்டு,
கொள்கை ஒற்றுமைகள் சில உண்டு
பழங்கால பண்டமாற்று முறையுண்டு
இக்கால பணமாற்றும் உண்டு

ஆண்பால் நாட்டின் படைகள் – வெண்படைகள்
நாட்டுப்பற்று உச்சமானால் துடிப்புடன் கிளர்ந்தெழுவர்
வெண்படைகளுக்கு வால் உண்டு
அடங்காமை இவர்கள் குணாதிசயம்.
பெண்பால் நாட்டின் படைகள் – செம்படைகள்
நாட்டுப்பற்று உச்சமானால் வெடித்து வெளிவருவர்
செம்படையினருக்கு வால் இல்லை, வால் (wall) உண்டு
அடக்கம் இவர்கள் குணாதிசயம்.

இருபால் நாடுகளும்
நேசக்கரங்களால் அரவணைப்பதும் உண்டு
பின் விட்டு விலகுவதும் உண்டு
சில நேரங்களில் சில மணித்துளிகள்
எல்லைகள் மறைவதும் நெருக்கம் இருக்கமாவதும்
இருக்கத்தான் இருக்கிறது.

வெளியுறவு முரண்பாடுகள் இங்கே தான் எழுகின்றன
நேச அரவணைப்பின் இருக்கமும் இங்கே
வெண்படைகளின் ஊடுருவலும் இங்கே
போர் முரசோ கொட்டவில்லை
இரத்தமோ சொட்டவில்லை
வியர்வைதான் இருபால் நாட்டின் மேற்பரப்பில்
முத்து முத்தாய் முத்துக்களாய்.

வெண்படையோ, செம்படையினூடே
வாலும் உண்டு, வாலும் ( wall ) உண்டு
மடிவது ஆயிரமோ, இலட்சமோ, கோடியோ
இறுதி விநாடி அமைதி நிலவியது
இருவர் தான் மிஞ்சியது
ஓர் வெண்படையின் வால் ஓர் செம்படையின் வாலில் ( wall ) ஊடுருவியது.
இருபடையின் நேசக்கைக் குலுக்கல்
விளைவு கவிதையின் தலைப்பு.
- ஜோவியா

Tamil Poem 4

ஜூலை 20, 2007

ஆதிப்பெண்ணின் ஒப்பாரி

எந்த அப்பனும்
இனிமேல் சொல்லாதீர்
“என் இரத்தம்” என்று
இந்த ஜெனிட்டிக் காலத்திலும்
“என் இரத்தம்” என்று
உணர்ச்சிவசப்படாதீர்

வைரமுத்து சொன்னது போல்
“என் காமக்கொழுப்பு” என்று
வேண்டுமானால் சொல்லுங்கள்
அல்லது
இந்த ஜோவியா சொல்வது போல்
காமம் கிண்டிய “சர்க்கரைப் பாகு” என்று
வேண்டுமானால் சொல்லுங்கள்
ஆனால்,
விஞ்ஞானம் சொல்கிறது,
உங்கள் இரத்தமும் வேண்டாம்
காமக் கொழுப்பும் வேண்டாம்
சர்க்கரைப் பாகும் வேண்டாம்
பெண்ணே! நீ மட்டும் போதும்

மதமே!
உங்கள் மதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்
மதமாற்ற தடைச் சட்டம் ரத்தாகிவிட்டது.
நான் தான் முதல்
ஆதி ஆணும் என்னை
வழிமொழிந்தவன் தான்
என்று என் ஒப்பாரி ஓய்வது
ஜெனிட்டிக் விஞ்ஞானியே!
உருவாக்கு,
ஆணற்ற ஆணை.

என் ஒப்பாரி ஓய்ந்தால்,
ஒப்பந்தம் செய்வோம் ஆண்களோடு
“ஆணை அடிமையாக்க மாட்டோமென்று”.
– ஜோவியா

Tamil Poem 3

ஜூலை 19, 2007

சமூக விலங்கு

புணர்ந்தார்கள்.
எனக்காகவா?
விதைக்கபட்டேன்.
மதத்தில் நுழைக்கப்பட்டேன்.
முளைத்தேன்.
பூத்தேன்.
புணர்ந்தேன்.
இருமுறை காய்த்தேன்.
கனிந்தேன்.
உதிர்ந்தேன்.
எல்லாம் யாருக்காக?
எனக்காகவா?
பண்பட்ட சமுகத்தில்,
நான் ஒரு “சமுக விலங்கு”.
– ஜோவியா