‘நான் ரசித்த கவி(தை)கள’ பகுப்புக்கான தொகுப்பு

செல்வேந்திரன் கவிதை

மே 31, 2008

ஒரு கவிஞன் உருவாகுகிறான்

குனிந்து நீ பெருக்கினாய்
குருடானது கண்கள்
மின்னல்தானே கண் பறிக்கும்
நிலவுமா?
எழுதி முடித்துவிட்டு
எப்படி என் புலமையென்றேன்
“ச்சீ பொருக்கி” என்கிறாய்
வா பொறுக்கலாம்
தமிழ் வளர்க்கலாம்!

           – செல்வேந்திரன்
             ஆனந்த விகடன் [28-11-07]

ஜெனிபர் கவிதை

மே 7, 2008

ஜெனிபர் கவிதை

எதையாவது

பேசிக்கொண்டே இரு

இல்லையெனில்

இந்த மெளனம்

காட்டிக்கொடுத்துவிடும்

நீ யாரென்பதையும்

நான் யாரென்பதையும்

- ஜெனிபர்
- ( ஆனந்த விகடன் )

தாஜ் கவிதை

செப்டம்பர் 4, 2007

அன்பு

அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்…
‘அம்மா’
என்றேன் உடனே!
கேட்டது
அம்மாவாக இருந்தால்,
இன்னும் சின்னதாய்ச்
சொல்வேன்
‘நீ’… என்று!

- தாஜ்

- ” ஆனந்த விகடன் ” (17-11-02)