ஜூன், 2008 க்கான தொகுப்பு

எண்ணலை 2

ஜூன் 29, 2008

மென்பொருள் அற்ற மென்பொருள் நிபுணர்கள்

மென்பொருள் நிபுணர்களில் பெருபாண்மையோர் (51% அல்ல 80% வரை) மென்பொருள் அற்ற மென்பொருள் நிபுணர்களே. நான் மென்பொருள் என்று குறிப்பிடுவது அவர்களது மூலையை.

பெருவாரியான மென்பொருள் நிபுணர்களிடத்தில், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த மொழிகளில் எளிய கேள்விகளைக் கேட்டும், மிக எளிய நிரல்களை எழுதச் சொல்லிக் கேட்டும் எந்த நிபுணரும் விடையளிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே இதை எழுதுகிறேன்.

மென்பொருள் நிபுணர்களை தேர்ந்தெடுக்கும் மென்பொருள் கம்பெனிகள், எதை அடிப்படையாக வைத்து தேர்ந்தெடுக்கிறார்களோ தெரியவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற மென்திறமைகள், ஆங்கிலப் பேச்சாற்றல், குழு செயல்பாடு, ஆளுமை மற்றும் தீர்வுகாணும் ஆற்றல் நிச்சயமாக பொறியல் மாணவர்களைக்காட்டிலும் TV சீரியல்-சினிமா நடிகை-நடிகர்கள், தொகுப்பாளர்கள்,
குத்தாட்ட நடிகை-நடிகர்கள், மாடல்கள், உயர் தர விபச்சாரிகள் போன்றோர்க்கு மிகுதியாக இருக்கிறது. எனவே ஏதோவொரு மென்பொருள் கம்பெனி இவர்களை (பரிச்சார்த்தரமாக) தேர்ந்தெடுத்து சேர்த்துப்பாருங்கள் நிச்ச்யமாக அவர்களைக்காட்டிலும் பின்னூவார்கள்! மின்னூவார்கள்! மென்பொருள் எழுதுவார்கள்!

இந்த இடத்தில் Dr.C.K.Prahlad’s வார்த்தைகளைக் குறிப்பிட கடமைபட்டுள்ளேன்.
Dr.C.K.Prahlad, the management guru says, “When the first Microsoft ‘Windows’ came out, it was absolutely phenomenal. Some five people were involved in its creation. Thereafter, you by one after another and the changes are very marginal. Now they have 2500 Ph.D.s who have not created anything different. The same argument surfaces: once things are in place they are organised and crystallised!”.

அமைச்சர் இலஞ்சம் வாங்குவதை எப்படி மறைமுகமாக வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பினார்களோ, அது போல் மென்பொருள் நிபுணர்கள் என்று சொல்லிக்கொண்டு கொழுத்த சம்பளத்துடன் கொழுத்துத் திரியும் மூலைக் கொழுப்பற்ற நிபுணர்களையும் மறைமுகமாக அவர்களிடம் எளிய கேள்விகள் மற்றும் நிரல்களை  கேட்டும், எழுதச் சொல்லியும் அவர்களது அறியாமை நிலையை அப்படியே வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பிட எண்ணுகிறேன், விளைகிறேன். முடியவில்லை, ஏனென்றால் என் தம்பி, தங்கை, நண்பர், உறவினர் என்று நீயூரான்கள் அற்றவர்கள் மென்பொருள் நிபுணர்களாக உள்ளனர். என்ன செய்வது? கவிதை எழுதி மனதை சாந்தப்படுத்திக் கொள்ளவேண்டியது தான். அப்படி எழுதிய கவிதை தான் “எதனால்”

மென்பொருளற்ற மென்பொருள் நிபுணர்களே!
கண்ணாடி பார்க்காதீர்!
உங்கள் பிம்பமே உங்களைக் காரித்துப்பும்!

புரட்சியாளர் ” சே குவேரா “

ஜூன் 13, 2008

கலைஞரின் 85-வது பிறந்த நாளில் அவருக்கு அர்பணிக்கும் கவிதை.

புரட்சியாளர் ” சே குவேரா “-வின் 80-வது பிறந்த நாள் (14-06-1928) நினைவுக் கவிதை

புரட்சியாளர் ” சே குவேரா “

சே குவேரா!
நீ வேறா? புரட்சி வேறா?
இல்லை
நீ புரட்சியின் வேரா?

” சே குவேரா “
உன் பெயர் உச்சரிக்கையில்
என் உச்சிமயிர் சிலிர்க்கிறதே!
உள்ளத்தில் தீ மூள்கிறதே!

ஏனோ சிலர் உனை
அலங்காரப் படம் ஆக்கிவிட்டனர்
ஆயத்த ஆடைகளில்
தெரிந்தோ? தெரியாமலோ?
ஏகாதிபத்தியத்தின் வியாபாரத் தந்திரமோ?
ஏகோபித்த வசீகரச் சின்னமோ? – நீ

” ரொசாரியோ “
நீ பிறந்த ஊராக இருக்கலாம்
இன்றும் நீ வாழும் ஊர்
புரட்சி விதைக்கப்பட்ட இளைஞர்களின் ” இதயூர் ” (இதய ஊர்)

தோட்டா உனை நோக்கிப் பாய்ந்தாலும்
காட்டாதே உன் முதுகு – புறமுதுகு!
சங்கத்தமிழ் பயின்றவனோ ?!
உன் தாய் தமிழச்சி மரபணு கொண்டவளோ ?!

நீ பிறந்த மாதம் ஜுன் (14-06-1928)
என் ஆசான் கலைஞர் பிறந்த மாதமும் ஜுன் (03-06-1923)
முத்தமிழ் அறிஞர் கலைஞரோ உனக்கு – அண்ணன்
நீயோ! அவர் இதயத்தில் என்றென்றும் – புரட்சி மன்னன்.

எண்பத்தைந்து அகவையிலும் எழுதுகிறார் ஏட்டில்
உன் எண்பதாவது அகவையாண்டில்
உனது கியூபப் புரட்சியை, பாடிஸ்டா வீழ்ச்சியை
யாருக்காக? இளைஞர்களே! நமக்காக.

நீ மருத்துவராய்
மோட்டார் சைக்களில் பயனித்து,
ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும், கம்யூனிசத்தின் அவசியத்தையும்
கண்டுணர்கிறாய் புரட்சியாளனாகிறாய்!
மோட்டார் பயணம் புரட்சிப்பயணமாகிறது.

எல்லைகள் கடந்தாய், ” பிடல் காஸ்ட்ரோ ” நண்பரானார்
கியூபப் புரட்சி கண்டாய், பாடிஸ்டாவை வெண்றாய்!
காங்கோ சென்றாய், பொலிவியா சென்றாய்…
புரட்சியாளனின் பயணம் முடிவதில்லை
தொட்ர்வது, தொடர்ந்துகொண்டே இருப்பது.

இயேசுவைக் காட்டிக்கொடுக்க ” யூதாஸ் ” இருந்தான்
ஐந்து வெள்ளிக்காசை இலஞ்சமாகப்  பெற்றுக்கொண்டு
” சே குவேரா ” ஐக் காட்டிக்கொடுக்க ஒருவள் இருந்தாள்
ஐம்பது பெஸோக்களை  ” சே குவேரா ” விடம் பரிசாக வாங்கிக்கொண்டு.

அன்று அக்டோபர் – 9, மதியம் 1.10 மணி

” கோழையே! சுடு,
நீ சுடுவது ” சே “-வை அல்ல
ஒரு சாதாரண மனிதனை “.

தோட்டா ஒன்று ” சே “-யின் இதயத்தை துளைத்தது
கோடானகோடி இதயங்களில் விதைக்கப்பட்டது ” புரட்சி “!

புரட்சியாளன் என்றும் இறப்பதில்லை
விதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்
களர் இதயங்களில் அல்ல
விளை இதயங்களில்.

ஒடுக்கப்பட்டவர்களின் பயணம் உலகமெலாம் தொடர்கிறது
அடக்குமுறைக்கு எதிராக,
மொழி, இனம் காத்திட
மறவன் சேனையாக, இளைஞர் பட்டாளமாக……

                                           – ஜோவியா