அமைதி
கவிஞர்களின் சங்கம நாள்
கவிதை எழுதச் சொன்னார்கள்
எனக்கு வந்த தலைப்பு “அமைதி”.
வெள்ளைத் தாளில் எழுத அமர்ந்தேன்
மற்ற கவிகள் அமைதியானார்கள்.
நான் (?)
அமைதியற்று, அமைதியற்று
மூலைகலங்கிற்று, கண்கள் சோர்ந்திற்று
இறுதியாக கவிதையை முடித்தேன்,
என் அழகிய பெயருடன்.
வெள்ளைத்தாளில் “அமைதி” தலைப்பாக
என் அழகிய பெயர் முடிவாக
இடைவெளி அமைதியாய் இருந்தது
ஒன்றும் எழுதப்படாமல்.
கவிஞர்களின் சங்கம நாளில்,
கவிஞர்களுக்கு ஓர் வேண்டுகோள்:
“என் கவிதையின் அமைதியை
யாரும் கெடுத்து விடாதீர்
இடையில் ஏதேனும் எழுதி”.
- ஜோவியா