Tamil Poem 2

By joviya

இப்படியும் ஓர் விபச்சாரி

அவள் அழுக்கிபோனவளோ! இத்துப்போனவளோ!
அழுக்கிப்போயிருந்தால் போகட்டுமே!
இத்துப்போயிருந்தாலும் போகட்டுமே!
அவள் வாழ்வின் சுழல்கள் அவளை,
அந்தச் “சிவப்புவிளக்கு” விடுதிக்கு
காமுகர்கள் அவளது பூ உடலை
அங்கே பாருங்கள் கசக்கிய பூவாய் அவள்!
அவள் உள்ளத்தின் உண்மைகளை அறீவீரோ!
உள்ளப் போராட்டங்களைத்தான் அறீவீரோ!
உடல் தூய்மையைப் பார்க்கின்ற மனிதா,
அவள் உள்ளத் தூய்மையைப் பார்க்கின்றீரா!
வேதங்களின் பார்வையில்
அவள் கற்பற்றவள் தான்
எனது பார்வையில்
அவள் கற்புக்கரசியே!
அவள் பகிரங்கமாக அறிவிப்பாள் விபச்சாரியென்று
ஏனென்றால் அழுகிப்போனவள் உணர்கிறாள்.
இவள்கள் அறிவிப்பாள்களா சமுதாயப் போலிகளென்று?
மாட்டார்கள்,
ஏனென்றால் இவள்கள் வரட்டுக் கவுரவத்தில் வாழ்கிறவர்கள்.
அவள் சீதையைப் போல் தீயில் குதித்திருக்கலாம்
அவளால் முடியவில்லை, ஏன்?
தீயில் எரிவது அவள் உடல் மட்டுமா?
இல்லை! இல்லை!
அவளது மாசற்ற இதயமும் தானே.
அவளறிந்த அவள் இதயத்தை அவளால்
தீயீல் கொன்றிட இதயமில்லை.
அன்று சீதை குதித்த “தீ” வேறு,
இன்றைய “தீ” வேறு
இன்றைய தீயில்
அவளும் எரிவாள், இவள்களும் எரிவாள்கள்.
ஓ மனிதா!
மூலையில் மூளையைச் செப்பனிடு
நீ மட்டும் முயன்றால்
அவளையும் “குத்து விளக்கு” விடுதிக்கு.
- ஜோவியா

2 பதில்கள் “Tamil Poem 2” க்கு;

  1. lduvl சொல்வதென்னவென்றால்:

    http://ringtonehere.pornzonehost.com/topringtonehere47.html

  2. vasya_jxt சொல்வதென்னவென்றால்:

    order adipex online [url=http://adef.forum24.se/]order adipex online[/url] ambien cr online [url=http://bdef.forum24.se/]ambien cr online[/url] buying cialis online [url=http://fdef.forum24.se/]buying cialis online[/url]

மறுமொழி இடுக