Tamil Poem 1

By joviya

மழை

மேகம் என்பது அவள் பெயர்
கருத்த நிறைமாத கர்ப்பிணி
தென்றல் மேகத்தின் மருத்துவச்சி
தென்றல் நட என்கிறாள்
மேகம் நடக்கிறாள்
தென்றல் ஓடு என்கிறாள்
மேகம் ஓடுகிறாள்
இவை எளிய பிரசவத்திற்கு பயிற்சி
இதனால் இல்லை மேகத்திற்கு அயர்ச்சி.

ஆணோ பெண்ணோ
அதுவே தாய்மையின் சுகம்
இதுவே மேகத்தின் அகம்
இன்றோ நாளையோ
சில விநாடிகள் தான் மிச்சமோ
இது தென்றலின் நாட்கொடுப்பு.

நேரம் தேதி நெருங்கிவிட்டது
தென்றல் பரபரத்தது
அமைதி நிலவியது அடுத்த விநாடியே
மேகத்திற்கு பிரசவ வலி.

அலறினாள் இடியாக
அழகிய சிசுவின் ஜனனம்
எங்கும் சிசுவின் சினுங்கள் துளிகள்
“மழை” என்று பெயரிட்டாள் மேகம்.

மறுமொழி இடுக